தமிழ்நாடு

தமிழகத்தில் 2 பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண்…

தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் பெண்ணொருவர், தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). இவர் ஓய்வு பெற்று ராணுவ வீரர் ஆவர். இவருக்கும் இரண்டாவது மனைவி வெண்ணிலாவுக்கும் (28) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கணவன் – மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனமுடைந்த வெண்ணிலா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

இதனையடுத்து அவர் தனது மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4) ஆகியோரை அழைத்துக் கொண்டு வாலாஜா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்ததில் மூவரும் ரயில் ஏறி பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிஸார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிள்ளைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content