இலங்கை

காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக இலங்கை முன்னெடுத்துள்ள புதிய திட்டம்!

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் “காசா சிறுவர் நிதியம்” அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (26.02) கூடிய அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மக்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ நிறுவனம் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.

இதேவேளை, காஸாவிலுள்ள சிறுவர் நிதியத்திற்கான பிரஜைகளின் நன்கொடைகளை இலங்கை வங்கியின் தப்ரோபென் கிளைக் கணக்கு இலக்கமான 7040016 க்கு அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு வரவு வைக்கப்பட்டுள்ள பணத்தின் வைப்புச் சீட்டை 077 69 73 039 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content