இந்தியா செய்தி

WIPL – முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ், ரன் குவிக்க திணறியது.

அதன்பின் கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், தீப்தி சர்மா 22 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் உ.பி. வாரியர்ஸ் அணி 19.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்து வீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளும், ஆஷா சோபனா மற்றும் ஷோபி டிவைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் டிவைன் மற்றும் கேப்டன் மந்தனா ஆகியோர் களமிறங்கினர்.

முடிவில் பெங்களூரு அணி 18 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content