இலங்கை செய்தி

துவாரகா தொடர்பில் வெளியாகின காணொளி!!! உன்னிப்பாக ஆராயும் பாதுகாப்பு அதிகாரிகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் உயிருடன் இருப்பதாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபாகரனின் பிறந்தநாளில் வெளியான காணொளியை பாதுகாப்பு அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த காணொளி தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடமும் அதிகாரிகள் வினவியுள்ளனர்.

ஆனால் அந்த காணொளியில் தோன்றிய பெண் பிரபாகரனின் மகள் இல்லை என்றும் அந்த காணொளி போலியானது என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாகரன் பிறந்த நாளான 27ஆம் திகதி கொண்டாடப்படும் மகாவீரர் தினத்தையொட்டி மாலை 5.54 மணி முதல் 6.04 மணி வரை இந்த காணொளி காட்சி வெளியாகியுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறுசீரமைப்பின் மிக முக்கியமான அறிக்கையாக வெளியாகியுள்ள இந்த காணொளி, முதலில் தமிழ் இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டது.

பிரபாகரனின் மகள் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கூறி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காணொளி உலகம் முழுவதும் விநியோகிக்கத் தயாராகி வருவதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

கடந்த செப்டம்பரில், துவாரகா பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கூறி தயாரிக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, அந்த காணொளியை பயன்படுத்தி விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பெருமளவில் பணம் சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகளை மீட்டெடுக்க இதுபோன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் புலனாய்வு அமைப்புகள் அவற்றை முறியடிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை