வட அமெரிக்கா

மோடியை மிகவும் புத்திசாலி மனிதர் என கூறிய அமெரிக்க ஜனாதிபதி

இந்திய-அமெரிக்க வரிவிதிப்பு பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அவர் பாராட்டியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோடியை மிகவும் புத்திசாலி மனிதர் என்றும், சிறந்த நண்பர் என்றும் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நியூ ஜெர்சிக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலினா ஹப்பாவின் பதவியேற்பு விழாவில் டிரம்ப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அவர்கள் மிகவும் திறமையானவர்கள். பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி மனிதர், என்னுடைய சிறந்த நண்பர்.

நாங்கள் மிகவும் நல்ல விவாதங்களை நடத்தினோம். இது இந்தியாவிற்கும் நம் நாட்டிற்கும் இடையே மிகச் சிறப்பாக செயல்படும் என்று நான் நினைக்கிறேன்.

“உங்களுக்கு ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்