இலங்கை

அமெரிக்க விசாவிற்காக காத்திருப்போருக்கான மகிழ்ச்சியான தகவல்! வெளியாகிய முக்கிய அறிவித்தல்

2025 ஆம் ஆண்டிற்கான பல்வகை வீசா (DV) திட்டத்திற்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலையை மே 04, 2024 அன்று 12.00 pm, EDT முதல் சரிபார்க்க முடியும் என்று அமெரிக்க தூதரகம் ‘X’ பதிவில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது உறுதிப்படுத்தல் எண்ணை http://dvprogram.state.gov/ESC/ இல் உள்ளிடுவதன் மூலம் தங்கள் நுழைவின் நிலையை சரிபார்க்க முடியும் என்று அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

“நீங்கள் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்களா என்பதை சரிபார்க்க இதுவே ஒரே வழி” என்று தூதரகம் மேலும் கூறியது.

பன்முகத்தன்மை விசா திட்டம் மூலம் ஒவ்வொரு வருடமும் எழுந்தமானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

எனினும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அதிகளவில் புலம்பெயர்ந்தோரை அனுப்பாத நாடுகளில் இருந்து மட்டுமே இவர்கள் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content