இலங்கை செய்தி

கொழும்பில் நடந்த கோர விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கொழும்பு – பம்பலப்பிட்டி சீ மாவத்தையில் 18 வயதுடைய தனியார் பல்கலைக்கழக மாணவன் செலுத்திய சொகுசு ஜீப் ஒன்று இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் என உத்தியோகபூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஜீப்பை ஓட்டி வந்த மாணவன் அதிர்ச்சி அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி கடல் வீதியில் பயணித்த சொகுசு ஜீப் வீதியில் அகழ்வைத் தவிர்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களுடன் மோதியதுடன் பின்னர் மின்கம்பத்தில் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தின் போது ஜீப்பில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில் மூன்று வாகனங்களும் மின்கம்பமும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார், வாகனங்களுடன் மோதி சில அடிகளுக்கு மேல் சென்றதும் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content