ஐரோப்பா

இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து – பலரை காணவில்லை

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள மேகியோர் ஏரியில் (Lake Maggiore) சுற்றுப்பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில் 19 பேர் காப்பாற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் சிலரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

லிசான்ஸா (Lisanza) நகரில் அந்தச் சம்பவம் நடந்தது. பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அந்த 16 மீட்டர் நீளப் படகில் 23 சுற்றுப்பயணிகள் உட்பட 25 பேர் இருந்தனர். மேகியோர் ஏரி இத்தாலியின் 2ஆவது ஆகப் பெரிய ஏரியாகும். அது பிரபலமான சுற்றுலாத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content