ஐரோப்பா செய்தி

முதலிடத்தை பிடித்த சிங்கப்பூர் மாணவர்கள்-இங்கிலாந்தின் நிலவரம்-முழு தகவல் உள்ளே!

இங்கிலாந்தில் ஆரம்ப பாடசாலைகளில் கல்விப் பயிலும் குழந்தைகள் சர்வதேச தரவரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்.

சர்வதேச எழுத்தறிவு, வாசிப்பு குறித்த ஆய்வின் சமீபத்திய முடிவுகள் வெளியாகியுள்ளன. பிர்ல்ஸ் என அழைக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் சர்வதேச நாடுகள் கல்விநிலையில், கொண்டுள்ள தரவரிசையை வெளிப்படுத்தியுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி இங்கிலாந்தில் கல்விப்பயிலும், ஆரம்ப பள்ளிக் குழந்தைகள், சர்வதேச தரவரிசையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளனர். முன்னதாக எட்டாவது இடத்தில் இருந்து முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்தது.

Diverse students wearing uniforms in school

அதேநேரம் சிங்கப்பூர் 587 மதிப்பெண்களுடன், முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து ஹாங்கொங், 573 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா 567 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வடக்கு அயர்லாந்தில் உள்ள குழந்தைகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  ஆறாவது இடத்தில் இருந்து அட்டவணையில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளனர் – ஆனால் இந்த முறை முக்கிய தரவரிசையில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content