இலங்கை

கொழும்பில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து -22 பேர் காயம்!

கொழும்பு பிரதான வீதியின் கஜுகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றும், கொள்கலன் ரயில் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (06.10) விபத்துக்குள்ளாகியது.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில், பேருந்துக்கு பின்னால் பயணித்த கொள்கலன் வாகனம் ஒன்றும் பேருந்துடன் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை பேருந்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கஜுகம பிரதேசவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்