இலங்கை செய்தி

உக்ரைனுக்கு ஆதரவாக போரட்டிய மூன்று இலங்கையர்கள் பலி!! இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியது

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக உக்ரைன் இராணுவத்தில் கடமையாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் பாக்முத் என்ற இடத்தில் மூன்று இலங்கை அதிகாரிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது.

செவ்வாய்கிழமை (டிசம்பர் 05) உக்ரைன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போரிட்ட போது அவர்கள் கொல்லப்பட்டதாக தூதரகம் மேலும் கூறியது.

உயிரிழந்த மூன்று அதிகாரிகளில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் கப்டன் ரனிஷ் ஹெவகேயும் அடங்குவார். இவர் பல் மருத்துவர் என அழைக்கப்படுகிறார்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த உக்ரேனிய இராணுவத்தினரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று இலங்கை அதிகாரிகள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content