இலங்கை செய்தி

உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை தேவையில்லை – ஹர்ஷ சில்வா

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்து அது தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு தெரிவித்ததை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நன்றி தெரிவிக்கும் வேளையில், நாடாளுமன்ற சிறப்புரிமையுடன் தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப்போது சபாநாயகர் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா என கேட்டதாகவும், அவ்வாறான அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு அவ்வாறான விசாரணை தேவையில்லை எனவும் தேவைப்பட்டால் மீண்டும் அறிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது.

இதன்படி,  குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை