இலங்கை செய்தி

பெரும் தொகை தங்கம் கொள்ளை – இவர்களை பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா?

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கல்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று 37 கிலோ தங்கத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றம் தொடர்பில் கல்பிட்டி நீதவான் நீதிமன்றம் ஐந்து சந்தேக நபர்களை பெயரிட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

071 859 1763 அல்லது 071 859 4916

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content