ஐரோப்பா

இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில் இந்திய மாணவரின் சடலம் மீட்பு!

கடந்த மாதம் இங்கிலாந்தில் காணாமல் போன 23 வயதான இந்திய மாணவர் அங்குள்ள தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்த மித்குமார் படேல், நவம்பர் 17ஆம் திகதி காணாமல் போனார்.

நவம்பர் 21 அன்று கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ஃப் பகுதிக்கு அருகே தேம்ஸ் நதியில் அவரது உடலை பெருநகர காவல்துறையினர் கண்டுப்பிடித்தனர்.  இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என மெட் போலீஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மித்குமார் பட்டேலின் உறவினராக பார்த் பட்டேல் அவருக்காக நிதித் திரட்டும் நடவடிக்கையில் இறங்கினார். இதன்படி 4500 பவுண்டுகளுக்கு மேல் அவர் திரட்டி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content