பிரித்தானியாவில் குழாய் மூலமான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு!
பிரத்தானியாவை உலுக்கும் வெப்ப அலை காரணமாக நீர் பயன்பாடு கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு குழாய் மூலம் நீர் விநியோகம் செய்வதை நிறுத்துமாறு தேம்ஸ் வாட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக தண்ணீர் ஊற்றும் கேன்களைப் பயன்படுத்தவும், முடிந்தவரை தண்ணீரை மறுபயன்பாடு செய்யவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கார் கழுவுதல் போன்ற பணிகளைத் தாமதப்படுத்தவும் தேம்ஸ் வாட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



