உலகம் செய்தி

ஈரானில் பாடசாலைகளுக்கு பூட்டு: 21 ஆம் திகதி முதல் இணையவழி கற்பித்தல்!

  • April 16, 2026
  • 0 Comments

ஈரானில் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறும் என அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்விவரை அனைத்து நிலைகளிலும் உள்ள மாணவர்களுக்கு இணையவழியில் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு மறு உத்தரவு வரும் வரை கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் இணையம் வாயிலாகவே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் சூழலைக்கருத்திற்கொண்டே இம்முடிவு […]

உலகம் செய்தி

லெபனானில் 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

  • April 16, 2026
  • 0 Comments

லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு UN’s refugee agency கவலை வெளியிட்டுள்ளது. லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, லெபனானுக்கு சர்வதேச சமூகம் அவசரகால நிதி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான முன்னுரிமையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் வலியுறுத்து!

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Bagher Ghalibaf வலியுறுத்தியுள்ளார். அத்துடன், லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு விரிவான போர்நிறுத்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். லெபனானில் அமைதி திரும்புவது ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாகவே அமையும் எனவும் ஈரான் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி இடம்பெறும் நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான […]

இலங்கை செய்தி

வடக்கில் திணைக்களங்களை கண்காணிப்பதற்கு விசேட குழு!

  • April 16, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், நேற்றுப் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு:- மாகாண சபை நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும், அரச சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றி […]

ஆஸ்திரேலியா செய்தி

பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கிறது ஆஸ்திரேலியா!

  • April 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (16) வெளியிடப்பட்டுள்ள ‘2026 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின்’ (National Defence Strategy 2026) படி, நாட்டின் பாதுகாப்புச் செலவினம் வரும் 2033 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத்துறைக்காக கூடுதலாக 53 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும். இதில் அடுத்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 14 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும். “இரண்டாம் […]

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்!

  • April 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (16) நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians மற்றும் Punjab Kings ஆகிய அணிகள் மோதுகின்றன. மும்பை நகரில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். தொடர் ஆரம்பத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்த மும்பை அணி, தற்போது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை எந்த தோல்வியும் சந்திக்காமல் தொடரில் ஒரே அணியாக ஆதிக்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

வெடுக்குநாறிமலையும் பறிபோகுமா?

  • April 16, 2026
  • 0 Comments

“வெடுக்குநாறிமலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். “வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். எனினும் இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுத்திருந்தார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே […]

விளையாட்டு

முதலிடத்துக்கு முன்னேறியது RCB!

  • April 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் ஆட்டத்தில் RCB அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Royal Challengers Bangalore (RCB) அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 20 ஓவர்களில் 146 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை RCB விரட்டியது. RCB அணி […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு: சவூதி இளவரசர், பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை!

  • April 16, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருக்கிடையில் ஜித்தாவில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் அமைதி பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ராஜதந்திர முயற்சிகளை சவூதி இளவரசர் வரவேற்றுள்ளார்.

இலங்கை செய்தி

திருமலையில் நீரில் மூழ்கிய சகோதரர்கள் சடலங்களாக மீட்பு!

  • April 15, 2026
  • 0 Comments

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று சகோதரர்கள் சடலங்களாக மீடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்துக்கு அருக்கிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலத்துக்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள நீரில் மூழ்கி காணாமல் போனார்கள். சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். இதன்போதே […]

error: Content is protected !!