உலகம் செய்தி

லெபனான் போர் நிறுத்தம்: ட்ரப்பை போற்றி புகழ்கிறது பாகிஸ்தான்!

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் Shehbaz Sharif வரவேற்றுள்ளார். குறித்த நடவடிக்கை அப்பகுதியில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட துணிச்சலான இராஜதந்திர முயற்சிகளால் இந்த அமைதி உடன்படிக்கை சாத்தியமானதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பாகிஸ்தான் தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளை […]

இலங்கை செய்தி

யாழில் தாக்குதல் முறியடிப்பு: வாள்களுடன் மூவர் கைது!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளனர். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வன்முறை கும்பல் தயாராகிக்கொண்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை தாமதிப்பது பெரும் அநீதி!

  • April 17, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும், வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.” இவ்வாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக, தெரிவுக் குழுவின் செயல்முறையின் முடிவுகளுக்காக ஆணைக்குழு காத்திருக்கிறது. தெரிவுக் குழுவின் முடிவின் அடிப்படையிலேயே, தேர்தல்களை நடத்துவது குறித்து எங்களால் தீர்மானிக்க முடியும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவும், தெரிவுக்குழுவின் முன் […]

உலகம் செய்தி

“அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்

  • April 17, 2026
  • 0 Comments

“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு, “ஈரான் உடனான அமைதிப் பேச்சு சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் […]

இலங்கை செய்தி

பற்றி எரிந்த வீடுகள்: நுவரெலியாவில் நடந்தது என்ன?

  • April 17, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு (16) ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. மூன்று வீடுகளில் வசித்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்கவைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்தால் வீடுகளில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளன. நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்குரிய விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

உலகம் செய்தி

போர் நிறுத்தம்: அமெரிக்காவுக்கு ஐ.நா. பாராட்டு!

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் António Guterres வரவேற்றுள்ளார். இந்த அமைதி முயற்சியை சாத்தியமாக்குவதற்கு பங்காற்றிய அமெரிக்காவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். குறித்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதி மற்றும் நீண்டகால தீர்வுகளை எட்டுவதற்கு ஒரு தொடக்கமாக அமையும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை மதித்து, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் எனவும் ஐ.நா. செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை செய்தி

இந்திய துணை ஜனாதிபதியை 19 ஆம் திகதி சந்திக்கிறது தமிழரசுக் கட்சி!

  • April 17, 2026
  • 0 Comments

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (19) இலங்கை வருகின்றார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். இருதரப்பு நல்லுறவு மற்றும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணியளவில், கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில், இந்திய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு […]

விளையாட்டு

IPL:இன்றைய போட்டி…..!

  • April 17, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 25 ஆவது லீக் ஆட்டத்தில் Kolkata Knight Riders மற்றும் Gujarat Titans ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறும். அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை வெற்றியை பதிவு செய்யவில்லை. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 போட்டிகளில் மண்கவ்வியுள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக […]

பொழுதுபோக்கு

ஜனநாயகனை ஒளிபரப்ப தடை விதிப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை இணையதளங்கள் மற்றும் கேபிள் ‘டிவி’க்களில் ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் அப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகவில்லை. எனினும், சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் படம் சட்டவிரோதமாக வெளியானது. இந்நிலையில், இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் இந்த படத்தை ஒளிபரப்ப தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது. நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி […]

ஆஸ்திரேலியா

போர்க்குற்றச்சாட்டில் கைதான ஆஸ்திரேலிய முன்னாள் படை அதிகாரிக்கு பிணை!

  • April 17, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி Roberts-Smith பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சாட்சிகளை சந்தேகநபர் திசை திருப்பக்கூடும் என்ற அரசுத் தரப்பின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, சிட்னி நீதிமன்றம் அவருக்கு சில கடுமையான நிபந்தனைகளுடன் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் இருந்தபோது அவர் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணைகளின் பின்னரே அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது சிவில் நீதிமன்றத்தில் […]

error: Content is protected !!