ஆஸ்திரேலியா செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் அறிவிடக்கூடாது: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

  • April 18, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டுள்ளமை ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese வரவேற்றுள்ளார். “தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் கட்டணங்கள் இல்லாத சூழலை நாங்கள் விரும்புகிறோம். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிட்னியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். “ ஆசியாவிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் வர்த்தகப் பொருட்களில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றது. எனவே, அங்கு ஏற்படும் பாதிப்புகள் ஆசியாவிற்கு அதிக அழுத்தத்தை அளிக்கின்றன.”எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேற்காசிய மோதலை […]

இலங்கை செய்தி

மலையக பிரதிநிதிகளையும் சந்திக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 18, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், மலையக பிரதிநிதிகளை கூட்டாக சந்திக்கவுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளையே அவர் இவ்வாறு சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் நாளை (18) பிற்பகல் 2 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. மலையக தமிழர்களுக்காக இந்தியாவின் உதவித் திட்டங்கள், வீட்டும் திட்டம், இந்திய புலமைப்பரிசில் மற்றும் காணி உரிமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்பொது கலந்துரையாடப்படவுள்ளன. இந்திய துணை குடியரசுத் தலைவர் […]

உலகம் செய்தி

யுரேனியத்தை கையளிக்கமாட்டோம்: ஈரான் திட்டவட்டம்!

  • April 18, 2026
  • 0 Comments

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு மாற்ற ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா தெரிவிக்கும் கருத்தை ஈரான் அரசு முற்றாக மறுத்துள்ளது. நாட்டின் அணுசக்தி திட்டத்தை நிறுத்துவது தங்களின் கொள்கை முடிவுகளுக்கு எதிரானது என்று ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டின் நிலப்பரப்பிற்கு இணையாகக் கருதுவதாகவும், அதனை எக்காரணம் கொண்டும் கைவிட முடியாது என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஈரானிய தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை இனி மூடப்படமாட்டாது: ஈரான் உறுதியென ட்ரம்ப் அறிவிப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை இனி ஒருபோதும் மூடப்படமாட்டாது என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடல்வழிப் பாதையை ஒரு ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்படும் என ஈரான் இன்று அறிவித்தது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதிக்கு மட்டுமே இது பொருந்தும் என ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த கால எல்லை எதிர்வரும் […]

அரசியல் இலங்கை செய்தி

“புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நிதியை மக்களுக்காக பயன்படுத்துக”

  • April 17, 2026
  • 0 Comments

“பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என அரசு எண்ணக்கூடாது. புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு வளமான எதிர்காலம் அமையும்” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ITAK மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் Gnanamuthu Srinesan தெரிவித்தார். மட்டக்களப்பு, செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) 40 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ‘ஜனா […]

இலங்கை செய்தி

தமிழ்க் கட்சிகளின் சங்கமத்தை தடுக்கும் புல்லுருவிகள்: சாணக்கியன் சீற்றம்!

  • April 17, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை, சில அரசியல் புல்லுருவிகள் தங்களது சுயநல சுகபோகத்துக்காகத் தடுத்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியுள்ளார். மட்டக்களப்பு, துறைநீலாவணையில் நடைபெற்ற ‘யுனைட்டெட்’ விளையாட்டுக் கழகத்தின் சித்திரை விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; “தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், […]

இலங்கை செய்தி

14 இந்திய மீனவர்களுக்கு 22 ஆம் திகதி வரை விளக்கமறியல்

  • April 17, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மன்னார் வடக்கு, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த நிலையில், கடந்த 9ஆம் திகதி 10 மீனவர்களும், அதனைத் தொடர்ந்து 14ஆம் திகதி 4 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் […]

இலங்கை செய்தி

தையிட்டி காணி அளவீடு மே 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் பணிகள், விகாராதிபதியின் எதிர்ப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரையைச் சூழவுள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்வதற்கு, கடந்த 11 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இணங்குமாறு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் யாழ். […]

அரசியல் இலங்கை செய்தி

திடீர் பதவி விலகலுக்கு காரணம் என்ன? வெளியானது பின்புலம்!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (17) கையளித்து, பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டது. இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் பரபரப்பு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே இவர்கள் பதவி விலகியுள்ளனர் என தெரியவருகின்றது. நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இது தொடர்பில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகூட முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளனர்.

error: Content is protected !!