ஐரோப்பா

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது கரிசனை!

  • April 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனுக்கு €90 பில்லியன் கடனையும், ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளையும் முறையாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் 21வது தடைகள் தொகுப்பிற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளனர். ஈரான் போர் காரணமாக உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத உதவிகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இந்த உதவி தொகுப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையே நேட்டோவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பின் பரஸ்பர உதவிப் பிரிவிற்கான (சரத்து […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் ?

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிப் பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஆனால், இந்த முயற்சிகளை ஹிஸ்புல்லா சீர்குலைக்க முயற்சிப்பது தெளிவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் ஹிஸ்புல்லா இரண்டும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு விவகாரம்: ரஷ்யா–பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

  • April 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்‌ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவே இந்த உரையாடல் நடைபெற்றது. ஈரான்–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் மத்தியஸ்தப் பங்கினை லாவ்ரோ பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முயற்சிகளுக்கு மாஸ்கோ முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு […]

இந்தியா செய்தி

மேற்காசிய போர்: இந்தியாவில் 3 நாள் விசேட மாநாடு!

  • April 24, 2026
  • 0 Comments

இந்திய தூதரக தலைவர்கள் மாநாடு புதுடெல்லியில் எதிர்வரும ஏப்ரல் 28 முதல் 30 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. உலக நாடுகளில் இந்திய தூதுவர்களாக சேவையாற்றுபவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் முதல் நாள், வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி மற்றும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவும் ஈரானும் முற்றுகையிட்டு உள்ளதால் ஏற்படும் கடுமையான பொருளாதார பின்விளைவுகள் ஆகியவை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கமளிக்கவுள்ளார். இரண்டாம் நாள் […]

இலங்கை செய்தி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்கிறது வடக்கு!

  • April 24, 2026
  • 0 Comments

‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது. வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு மற்றும் திட்டமிடல் குறித்து ஜப்பானின் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் மற்றும் இலங்கையின் கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் […]

இலங்கை செய்தி

நேட்டோவிலிருந்து ஸ்பெயின் நீக்கப்படுமா?

  • April 24, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்பிலிருந்து ஸ்பெயினை நீக்குவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்றது என வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்டகனின் மின்னஞ்சலொன்றை மேற்கோள்காட்டியே இது தொடர்பில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தாலேயே ஸ்பெயின் இலக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. எனினும், நேட்டோ அமைப்பின் விதிமுறைகளுக்கமைய ஒரு உறுப்பு நாட்டை நீக்குவதற்கோ அல்லது இடைநீக்கம் செய்வதற்கோ ஏற்பாடு இல்லை என தெரியவருகின்றது. அதேபோல மேற்படி தகவலை ஸ்பெயின் பிரதமரும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஈரான்மீதான […]

உலகம் செய்தி

ஈரானுடனான ஒப்பந்தம் அவசரம் இல்லை என்கிறது அமெரிக்கா

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரானுடன் ஒப்பந்தம்  மேற்கொள்ள எந்தவொரு அவசரமும் இல்லையென  அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த போது அவர் இதனை கூறினார் ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு உலகில் உள்ள அத்தனை நேரமும் உள்ளது, நாங்கள் ஒப்பந்தத்திற்காக ஆர்வமாக இல்லை என்று தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டத்தை கைவிடுவதை மையமாகக் கொண்ட எந்தவொரு உடன்படிக்கையும் தற்போது ஈரானின் கையில் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கருத்துகள்,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

இலங்கை செய்தி

நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி நெடுந்தீவில் போராட்டம்!

  • April 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி இன்று (24) மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர். மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை. குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை […]

உலகம் செய்தி

லெபனான்–இஸ்ரேல் போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமைதிக்கான வாய்ப்பா, சவாலா?

  • April 24, 2026
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர்நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டதை லெபனான் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி, பெய்ரூட் அரசு, ஈரான் ஆதரவு பெற்ற  ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்குவதைத் தடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இருப்பினும், போர்நிறுத்தம் மீறப்பட்டதாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் இராணுவமும் ஒருவரை ஒருவர் குற்றம் சமத்தியுள்ளன. மேலும், இஸ்ரேல் வலியுறுத்தும் […]

இலங்கை செய்தி

காணி விடுவிக்குமாறு வலியுறுத்தி மயிலிட்டியில் போராட்டம்

  • April 24, 2026
  • 0 Comments

“வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி , காணி உரிமையாளர்கள் மயிலிட்டி இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 1990 ஆம் ஆண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் […]

error: Content is protected !!