முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஈழத்து மக்களாக ஒன்றிணைவோம்!
“இவ்வருடத்துக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து ஈழத்து மக்களாக நினைவுகூர வேண்டும்.” இவ்வாறு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அறைகூவல் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் […]













