இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்தின் புன்புலம் சிங்களக் குடியேற்றம்: அமைச்சர் மறுப்பு!

  • February 26, 2026
  • 0 Comments

“கிவுல் ஓயா திட்டத்தின் பின்னணி சிங்களக் குடியேற்றமல்ல.” – என்று Minister Ramalingam Chandrasekhar தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “கிவுல் ஓயா திட்டத்தை வைத்து பல்வேறு விதமான கருத்துகள் பரப்பப்படுகின்றன. சிங்களக் குடியேற்றத்தை நோக்கமாகக் கொண்டு கிவுல் ஓயா திட்டம் அமைக்கப்படவில்லை. மாறாக, விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவே அந்தத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது. அங்கு குடியேற்றங்களை மேற்கொண்டால் தமிழ்க் குடியேற்றங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். கடந்த அரசுகளில் […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

  • February 26, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் State Intelligence Service முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை , கைது நடவடிக்கையை வரவேற்றுள்ளது. […]

செய்தி

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்: இஸ்ரேல் நாடாளுமன்றில் மோடி வலியுறுத்து!

  • February 26, 2026
  • 0 Comments

” தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. இது விடயத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிக்கும்.’’ இந்திய பிரதமர் மோடி Narendra Modi திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ தீவிரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது. ஒக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உங்கள் வேதனையை உணர்கிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலும், இஸ்ரேலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலும் ஒன்றுதான். பொதுமக்களை கொல்வதை நியாப்படுத்த […]

இலங்கை செய்தி

“புலிகளை தோற்கடிக்க பங்களிப்பு வழங்கியவரே சுரேஷ் சலே”

  • February 26, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி கூறிய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila தெரிவித்தார். “புலிகளை தோற்கடிப்பதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய படைவீரர்தான் சுரேஷ் சலே. எனவே, அவரை பழிவாங்க வேண்டும் என்ற தேவைப்பாடு பிரிவினைவாத சக்திகளுக்கு இருந்தது. சனல் 04 ஊடகத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக […]

விளையாட்டு

மே.தீவுகள், தென்னாபிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • February 26, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (26) நடைபெறும் போட்டியில் தென்னாபிரிக்கா South Africa மற்றும் மேற்கிந்திய தீவுகள் West Indies அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் Ahmedabad இன்று மாலை 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்படும். சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளுமே தாம் எதிர்கொண்ட முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. தென்னாபிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகளிடம் சிம்பாப்வே அணி மண்டியிட்டது.

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி யாழில் போராட்டம்!

  • February 26, 2026
  • 0 Comments

“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி நாளைமறுதினம் (28) சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப்போராட்டம், அன்றைய தினம் காலை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளது. அங்கிருந்து பேரணியாகச் செல்லும் போராட்டக்காரர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்து தமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தாயகச் செயலணியின் பிரதிநிதிகள் […]

விளையாட்டு

அரையிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் மிக முக்கிய போட்டி இன்று!

  • February 26, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா India மற்றும் சிம்பாப்வே Zimbabwe அணிகள் இன்று (26) மோதுகின்றன. சென்னை Chennai சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற வேண்டும். சிம்பாப்வே லீக் […]

விளையாட்டு

இலங்கை அணி ‘அவுட்’: ரசிகர்கள் கடும் சீற்றம்!

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lankan அணியின் தொடர் தோல்விகளால் அவ்வணியின் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். தற்போதைய அணிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். நேற்றைய ஆட்;ட முடிவில் மைதான வளாகத்திலும், சமூகவலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இலங்கை அணியை கட்டியெழுப்ப முடியாது என முரளிதரன் வெளியிட்ட கருத்தை பலரும் ரீ போஸ்ட் செய்துவருகின்றனர். 20 உலகக் கிண்ண தொடரில் நேற்று ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து New Zealand அணி […]

இலங்கை செய்தி

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்தவர் மடக்கி பிடிப்பு: யாழில் பரபரப்பு!

  • February 26, 2026
  • 0 Comments

யாழ். சுன்னாகம் நகர் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்ட இராணுவச் சிப்பாயென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் நகர்ப் பகுதியில் பெண் ஒருவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென அப்பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதன்போது, அப்பெண்ணின் சத்தத்தைக் கேட்டு திரண்ட பொதுமக்கள், கொள்ளையனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட நபரைச் […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவின் கைது பழிவாங்கல்: கம்மன்பில குற்றச்சாட்டு!

  • February 25, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது பழிவாங்கல் நடவடிக்கையென முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகளுக்கு எதிரான போரின்போது சுரேஷ் சலே பங்களிப்பு வழங்கியுள்ளார். எனவே, அவரை பழிவாங்குவதற்குரிய எண்ணம் பிரிவினைவாத சக்திகளுக்கு இருக்கலாம் எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார். பிரதான சூத்திரதாரி யாரென கண்டுபிடிக்கப்பட வேண்டும். மாறாக அப்பாவி திட்டமிட்ட அடிப்படையில் தண்டிக்கப்படுவதை நாம் ஏற்கமாட்டோம். அநீதிக்கு எதிராக முன்னின்று செயல்படுவோம் எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

error: Content is protected !!