இலங்கை செய்தி

யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நியமனம்!

  • February 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி Senior Professor Thirunavukkarasu Velnambi ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மார்ச் 25 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் கிழக்கு, புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி, தற்போது யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றி வருகின்றார். கல்வித்துறையிலும் […]

அரசியல் இலங்கை செய்தி

நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

  • February 26, 2026
  • 0 Comments

நௌபர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாவார் என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது  அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது தொடர்பில் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டார். மேற்படி கைது நடவடிக்கையானது நாட்டு மக்களை திசை […]

இலங்கை செய்தி

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு!

  • February 26, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் உட்பட்ட குழுவினர் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் இன்று (26) வழிபாட்டில் ஈடுபட்டனர். பொலன்னறுவையில் இருந்து உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்திற்கு வந்திரங்கிய சுவாமிகள் உட்பட்ட குழுவினரை நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர வரவேற்றார். அங்கிருந்து வாகன பேரணி மூலமாக சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுவாமி அழைத்து வரப்பட்டார். ஆலயத்தில் நிர்வாக […]

விளையாட்டு

தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி: மண்கவ்வியது மே.தீவுகள்!

  • February 26, 2026
  • 0 Comments

மேற்கிந்திய West Indies தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா South Africa அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 83 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், ஹோல்டர் – சைபர்ட் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை ஈடுபட்டனர். இதனால் அணியில் […]

செய்தி

வவுனியா மாவட்ட கூட்டத்தில் தனிச்சிங்களம்: ரவிகரன் எம்.பி. கடும் சீற்றம்!

  • February 26, 2026
  • 0 Comments

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (26) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இதனால் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் […]

இந்தியா

மணமகள்மீது துப்பாக்கிச்சூடு: சினிமா பாணியில் அரங்கேறிய கொடூரம்!

  • February 26, 2026
  • 0 Comments

மணமேடையில் மணமகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள பயங்கர சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஹாரின் , பக்சார் மாவட்டத்தில் சவுசா நகரைச் சேர்ந்தவர் ஆர்த்தி குமாரி. 18 வயதான இவருக்கும், உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகனும், மணமகளும் மேடையில் இருக்கும்போது, மணமேடையில் ஏறிய முகக்கவசம் அணிந்த நபரொருவர், திடீரென ஆர்த்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். காயம் […]

இலங்கை செய்தி

நாளை திருமலை வருகிறது “தரங்கிணி”!

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான “தரங்கிணி” (INS Tarangini) எனும் பாய்மரப் பயிற்சி கப்பல் நாளை (27) திருகோணமலை அஷ்ரப் முனையத்தை வந்தடைய உள்ளது. இயந்திரம் மற்றும் எரிவாயு விசையாழியைக் (Gas Turbine) கொண்ட பாய்மரப் பயிற்சி கப்பல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உலக கடற்படைகளிடம் உள்ளன. அந்தவகையில் இந்திய கடற்படை இத்தகைய பாய்மரப் பயிற்சி கப்பலைத் தன்வசம் வைத்திருப்பது கடற்படைத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. […]

பொழுதுபோக்கு

திருமண பந்தத்தில் இணைந்தது விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி

  • February 26, 2026
  • 0 Comments

நடிகர் விஜய் தேவரகொண்டா Vijay Deverakonda , நடிகை ராஷ்மிகா மந்தனா Rashmika Mandanna ஆகியோரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக உதய்பூரில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் திருமண வைபவங்கள் நடைபெற்று வந்தன. இதில் இருவரது குடும்பத்தினரும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று (26)முற்பகல் 10:10 மணிக்கு இருவரது திருமணமும் நடைபெற்றது. புது மண தம்பதியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தொழிலதிபர் அம்பானி […]

இலங்கை செய்தி

மக்களை கிலிகொள்ள வைத்துள்ள முதலமைகள்!

  • February 26, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த ஓய்ந்திருந்தாலும், கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில் போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களிலேயே இவ்வாறு முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களிலும் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் இடம்பெற்றன. எனவே, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் […]

இலங்கை செய்தி

ரவிகரன் எம்.பி. நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு பயணம்!

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் Durairasa Ravikaran , வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (26) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் நலன்புரிச்சங்கத்தினர், பிரதேசசபை உறுப்பினர்களான இ.கிரிதரன், பொ.தேவராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார். அத்துடன், வைத்தியசாலையில் காணப்படும் மிகவும் முக்கியமான பௌதீகவளப் குறைபாடொன்றைச் சீர்செய்வது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையொன்றை தம்மிடம் கைளிக்குமாறு […]

error: Content is protected !!