உலகம்

சவூதியிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஈரான் தாக்குதல்!

  • March 3, 2026
  • 0 Comments

சவூதி, ரியாத்தில் Riyadh உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்துக்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, கட்டிடத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்தன. தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் குடியேறுகிறார் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் Jacinda Ardern

  • March 3, 2026
  • 0 Comments

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் Jacinda Ardern ஆஸ்திரேலியாவில் குடியேற திட்டமிட்டுள்ளார். இதற்கமைய மெல்பேர்ன் அல்லது சிட்னியில் அவர் குடியேறுவார் என தெரியவருகின்றது. சிட்னியில் வீடு தேடி வருவதாகவும், விரைவில் இதற்குரிய நடவடிக்கை இறுதிபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நியூசிலாந்தில் நிலவும் மிக உயர்ந்த வாழ்க்கைச் செலவு, வீட்டுவசதி தட்டுப்பாடு மற்றும் குறைந்த ஊதியம் போன்ற காரணங்களால் அங்கிருந்து பலர் வெளியேறி வருகின்றனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அதிக வருமானம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதால், […]

இலங்கை செய்தி

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

  • March 3, 2026
  • 0 Comments

Parliament இன்று (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் மற்றும் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பில் எதிரணிகள் கேள்விகளை எழுப்ப உள்ளன. இதனால் இன்றைய சபை அமர்வின்போது மத்திய, கிழக்கு விவகாரம் தொடர்பிலேயே அதிகளவு பேசப்படலாம் என தெரியவருகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நிலைவரம் தொடர்பில் இந்தவார நாடாளுமன்ற அமர்விலேயே விசேட விவாதமொன்றை எதிரணி கோரலாம் என தெரியவருகின்றது. அத்துடன், […]

உலகம்

போரால் உலகப் பொருளாதாரமும் பாதிப்பு: எகிறியது எரிவாயு விலை!

  • March 2, 2026
  • 0 Comments

  மத்திய கிழக்கை போர் மேகம் சூழ்ந்து குண்டும் மழை பொழியும் நிலையில், சர்வதேச சந்தையில் எரிவாயு விலை சடுதியாக அதிகரித்துள்ளது. கத்தார் உள்ளிட்ட நாடுகளின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளால் எரிசக்தி பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கத்தார் உலகின் முக்கிய எரிவாயு ஏற்றுமதியாளராக திகழ்வதால் அங்கு ஏற்படும் வணிகத் தடங்கல்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கக்கூடும். ஐரோப்பாவில் குளிர் காலம் முடிவுக்கு வந்திருந்தாலும் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளதால் கோடை காலத்தில் சேமிப்பை நிரப்புவதில் சிக்கல் ஏற்படலாம் […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

இலங்கையில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பை உறுதி செய்தல், பொது ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அவசர நிலை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர கால சட்டத்தை நீடிப்பதற்குரிய யோசனை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அனுமதி பெறப்படும். பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறுவதற்கு […]

உலகம்

அகதி தஞ்சம் கோருவோருக்கு பிரிட்டன் கதவடைப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களுக்கு தற்காலிகமாக மட்டுமே புகலிடம் வழங்குவதற்குரிய கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் Home Secretary Shabana Mahmood இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. உத்தேச முன்மொழிவுக்கமைய அகதிகளுக்கு இனி நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாமல், தற்காலிகமாகவே அதற்குரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 30 மாதங்களுக்கு ஒருமுறை தற்காலிக குடியுரிமை மீளாய்வுக்குட்படுத்தப்படும். சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குவதற்குரிய இந்த நகர்வை பிரிட்டன் முன்னெடுக்கின்றது. எனினும், புதிய நடைமுறையானது அகதிகளின் […]

இலங்கை செய்தி

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்து!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். அனுராதபுரம், ரன்கெத்தகம பகுதியில் இன்று (2) மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதுகெலும்பாகத் திகழும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு மூண்டுள்ள […]

இலங்கை செய்தி

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

  • March 2, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை – வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை காலை, அந்த வீட்டின் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று […]

அரசியல் இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழல்: சஜித் தலைமையில் நாளை விசேட கூட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே சஜித் பிரேமதாசவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (03) இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. மேற்படி […]

இந்தியா

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி! மத்திய கிழக்கின் தற்போதைய போர் சூழ்நிலை கவலை அளிக்கின்றது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கனடா பிரதமருடன் இணைந்து டெல்லியில் இன்று ஊடக சந்திப்பை நடத்தினார். இதன்போது மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் மோதல் குறித்த பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘‘இத்தகைய பிரச்சினைகளுக்கு, பேச்சு மற்றும் தூதரக முயற்சிகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் […]

error: Content is protected !!