ஹொங்கொங் சென்ற விமானத்தில் நெருக்கடி நிலை!! 10 பேர் காயம்!
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்ற விமானமொன்று கடுமையான காற்றழுத்தச் சீர்குலைவிற்கு முகம் கொடுத்துள்ளது. இதனால் 10 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 240 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய ஏர்பஸ் A350-900 ரக விமானமான CX156 என்ற விமானமே மேற்படி அசம்பாவிதத்திற்கு முகம் கொடுத்துள்ளது. ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு பயணிகள் லேசான காயங்களுடன் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



