இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் வியட்நாம்!! ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியாவும் வியட்நாமும் மீயொலிவேகப் பயண ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, இந்தியத் தயாரிப்பான உஅமைப்பை வாங்கும் முதல் வெளிநாடாக வியட்நாம் மாறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 375 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் மீயொலிவேகப் பயண ஏவுகணை அமைப்பு, உலகின் அதிவேக மீயொலிவேக ஏவுகணை அமைப்பாகக் கருதப்படுகிறது. இதன் வேகம் ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.



