இலங்கை

கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த வரணி மத்திய கல்லூரி மாணவி சுவர்க்கா

யாழ் மாவட்டத்தில் கலை பிரிவில் வரணி மத்திய கல்லூரி மாணவி இராசரத்தினம் சுவர்க்கா முதலிடம் பெற்றுள்ளார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் மாலை வெளியானது.

இந்த நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ,வரணி மத்திய கல்லூரி மாணவி இராசரத்தினம் சுவர்க்கா 3ஏ சித்திகளை பெற்று கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் கலை பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் வரணி மத்திய கல்லூரியில் 2 பேர் கலைப்பிரிவில் 3ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்