இலங்கை

வெல்லவாயவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேகநபர் கைது

வெல்லவாய பகுதியில் வைத்து 63 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களுடன் நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அனுமதியற்ற இரண்டு 12 போர் துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள், இரண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள், 9 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், குண்டு துளைக்காத உடல் கவசம் மற்றும் சட்டவிரோத கத்தி ஆகியவை வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளன.

புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாமில் கடமையாற்றும் விசேட அதிரடிப்படையினரால் கிடைத்த தகவலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீடு பழையது எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீட்டின் பராமரிப்பாளர் எனவும்,  தெரியவந்துள்ளது.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!