உலகம் செய்தி

பல நாடுகளில் தற்கொலை தாக்குதல் திட்டம் – இஸ்லாமிய அரசு குழுவின் தலைவர் கைது!

துருக்கி மற்றும் பிற இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிய அரசு குழுவின் மூத்த உறுப்பினரான மெஹ்மத் கோரனை ( Mehmet Goren) கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கியின் அரச செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

மெஹ்மத் கோரன் ஒரு இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கைது நடவடிக்கை எப்போது நடந்தது அல்லது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இதில் ஈடுபட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

குறித்த நபருக்கு துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐரோப்பாவில் தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்தும் பணி வழங்கப்பட்டதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி