இலங்கை பொழுதுபோக்கு

சூர்யாவின் ‘கருப்பு’ படப்பிடிப்பில் அதிர்ச்சி: இலங்கை நடிகர் உயிரிழப்பு

பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு பணியாற்றிய இலங்கை நடிகர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா தனது புதிய திரைப்படமான ‘கருப்பு’ படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இதன் படப்பிடிப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த திரைபடத்திற்காக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்றக் கட்டடம் போன்று படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திரைப்படத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத் தயாராக இருந்த வேளையில், அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக படக்குழுவினர் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாத்தளை களுதாவளை ரத்தோட்டைவீதியை சேர்ந்த போஸ் என அறியப்படும் அழகர் கருப்புசாமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!