செய்தி விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடைக்கால தலைமை பயிற்சியாளர் நியமனம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி ஒரு வெற்றி, இரு தோல்வி, ஒரு முடிவில்லை என 3 புள்ளிகள் மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்த தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடியும் வரை அவர் இப்பதவியில் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயசூர்யா இதற்கு முன் இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!