இலங்கை

கொழும்பு மக்களுக்கு விசேட எச்சரிக்கை! 5 மடங்காக அதிகரித்த ஆபத்து

கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கொழும்பு மாநகர சபை, கொதடுவை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

நுளம்புகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Breteau Index இல் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக Breteau Index மதிப்பு 5% ஆக இருக்க வேண்டும் ஆனால் சில பகுதிகளில் 25% ஆக அதிகரித்துள்ளது என்றார்.

இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் அதிக தொற்றுநோய் நிலைமை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content