அறிவியல் & தொழில்நுட்பம்

ஒரே நேரத்தில் 23 செயற்கை கோள்களை விண்ணில் ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அவை அனைத்தையும் வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது.

உலகின் பல நாடுகளும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி அவற்றை விண்ணில் நிலை நிறுத்தி நிறுத்தி பயன்படுத்துகின்றன. தகவல் தொடர்பு, தட்பவெப்பம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை மிகப்பெரிய பலனை அளிக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவுக்காக மட்டுமல்லாது மற்ற பல நாடுகளுக்காகவும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது. இதே போல வளர்ந்த நாடுகள் பலவும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வெகுவாக பயன்படுத்துகின்றன.

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ்  எக்ஸ் நிறுவனம் சாதனை!

இதேபோல அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் மனிதர்களும் விண்ணுக்குச் சென்று வெற்றிகரமாக தரை இறங்கி வருகிறார்கள். அடுத்த கட்டமாக தற்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்நிறுவனத்தின் சார்பில் நேற்று ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பப்பட்டன. இவை அனைத்தும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது. அது வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content