இலங்கை செய்தி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவிருந்த நிலையில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விமானப்படை ரக்பி வீரர் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு தலைமை தாங்கிய ஹந்தயா என்ற குற்றவாளியுடன் திலங்க லக்மால் ராஜபக்ஷ எனப்படும் எஸ்.எப்.களு என அழைக்கப்படும் குறித்த நபர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஹந்தயா என்ற குற்றவாளிக்கு சொந்தமானது என கூறப்படும் மீகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த எஸ்.எப். களு எனப்படும் திலங்க லக்மாலின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஹோமாகம மற்றும் பாதுக்க பிரதேசங்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை நடத்துபவர் எஸ்.எப்.களு, என மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிரிழந்த எஸ்.எப்.களு, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு பெரிதும் அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content