அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Instagram நிறுவனத்தின் முக்கிய ஆலோசகர் லொட்டே ரூபேக் (Lotte Rubæk) பதவி விலகியிருக்கிறார்.

Instagram தளத்தில் இடம்பெறும் தீங்கான பதிவுகளை அதை நிர்வகிக்கும் Meta நிறுவனம் பொருட்படுத்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை நிறுவனம் கேட்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தற்கொலை, சுயமாகத் தீங்கு விளைவித்துக் கொள்வது ஆகியவற்றைத் தடுக்கும் ஆலோசனைகளை அவர் நிறுவனத்துக்கு அளித்து வந்தார்.

நிறுவனம் உயிரைவிட லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்குவதாக ரூபேக் குறிப்பிட்டார்.

அவர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேல் Meta நிறுவனத்தின் உலக நிபுணர் குழுவில் இருக்கிறார்.

சுயமாகத் தீங்கு விளைவித்துக் கொள்வதை ஊக்குவிக்கும் படங்களைத் தளத்திலிருந்து அகற்றத் தவறியதால் இளம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

“சிறுவர்கள், இளையர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு எங்களுடைய குரல் மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இனி இல்லை,” என்று ரூபேக் தம்முடைய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தற்கொலை, சுயமாகத் தீங்கு விளைவித்துக் கொள்வது போன்றவற்றை நிறுவனம் கடுமையாகக் கருதும் என்று Meta பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பல ஆண்டுகளாய் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று நல்ல மாற்றங்களைக் கொண்டு வர நிறுவனம் செயல்பட்டதாக அவர் சொன்னார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content