மத்திய கிழக்கு

காசாவில் பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்… 3 குழந்தைகள் பலி!

இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்கிறது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இதனால், மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சிகிச்சை நிறுத்தப்பட்டதை அடுத்து, குழந்தைகள் வார்டில் 3 குழந்தைகள் உயிரிழந்து விட்டன.

36 குழந்தைகள் கொண்ட பிரிவில் கைகளால் செயற்கை சுவாசம் அளிக்கும் அவல நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் நாளா புறமும் சுற்றி வளைத்துவிட்டது.

Gaza hospital crippled as fighting rages nearby - BBC News

மருத்துவமனையில் 400 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், போரினால் புலம் பெயர்ந்த 20,000 பேர் மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே மயக்க மருந்து இல்லாமல் குழந்தைகள், பெரியவர்களுக்கு வலியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த கொடுமைக்கு மத்தியில் தற்போது பெரிய மருத்துவமனையில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content