சுவீடனில் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு : 05 பேர் பலி!
ஸ்வீடனில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே 200 கி.மீ (125 மைல்) தொலைவில் உள்ள ஓரேப்ரோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பள்ளியில் ஒரு ஆசிரியரிடமிருந்து “தானியங்கி ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடந்ததாக” ஒரு குறுஞ் செய்தி கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் விலகி இருக்குமாறு காவல்துறை வலியுறுத்தியது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 34 times, 1 visits today)





