ஐரோப்பா

ரஷ்ய- சீன வெளியுறவு மந்திரிகள் இடையே சந்திப்பு…

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால், எரிபொருள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு, சீன வெளியுறவு மந்திரி வாங் யி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று ரஷ்யாவை சென்றடைந்த அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கேவை நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெளியுறவு மந்திரிகள் செர்கே லாவ்ரவ் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் சந்தித்து பேசி கொண்டனர் என தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர், ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

China's foreign minister holds talks with Russia's Lavrov in Moscow | Russia-Ukraine war News | Al Jazeera

ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளையும் செய்து வருகின்றன. பொருளாதார தடைகளையும் விதித்து நெருக்கடி அளிக்க முயன்றன. எனினும், இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா மற்றும் சீனா நாடுகள் உள்ளன. சமீபத்தில் ரஷ்யாவுக்கு சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறும் என்ற வகையில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதுபற்றி சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, வடகொரியா மற்றும் ரஷ்யா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்து இருக்கிறோம். தேவைப்பட்டால், கூடுதல் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என கூறினார். இந்த சூழலில், சீன வெளியுறவு மந்திரியின் பயணம் அமைந்துள்ளது. ரஷ்யா மற்றும் சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பில் உக்ரைன் போர் பற்றி ஆலோசிக்க கூடும் என கூறப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content