இலங்கை செய்தி

தனி பாதுகாப்பு பிரிவை கோறும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனாதிபதியின் செயலாளரான அனுர திஸாநாயக்கவிற்கு கடிதம் மூலம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரிய கடிதத்தை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி, 163 பாதுகாவலர்கள், 15க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள், 6 மருத்துவ பணியாளர்கள், கணினி, பிரிண்டர் ஆகியனவும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி அநுர திஸாநாயக்கவிற்கு குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் வசதிகள் உள்ள நிலையில், ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக தனியான பாதுகாப்புப் பிரிவை ஏற்படுத்துமாறு கோருவது கூட பிரச்சினைக்குரிய விடயமாகும்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை