இலங்கை செய்தி

இலங்கையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – காலநிலை தொடர்பில் கவனம்

இலங்கையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் நாட்டின் காலநிலை நிலவரம் தொடர்பில் முழுமையான அறிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும், மோசமான வானிலை நிலவும் பட்சத்தில் வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், அதற்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும் வளிமண்டலவியல் திணைக்களத்திடம் அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர, நாளை பிற்பகல் 3:30 மணிக்கு பின்னர் மூன்று மணிநேரத்துக்கு ஒரு தடவை வானிலை அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதற்கிடையில், மோசமான வானிலை மற்றும் பேரிடர்களால் வாக்குப்பதிவு தடைபடுவதைத் தடுக்க தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் திடீர் வெள்ளத்தை சமாளிக்க படகுகள் தயார் செய்யுமாறு கடற்படைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை