பொழுதுபோக்கு

பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் திடீர் மரணம்

பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் தமது 69ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.

பிரபல பாடகி உமா ரமணன், சென்னை – அடையாரில் அவரது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அவர் 6,000 இற்கும் அதிகமான மேடை நிகழ்வுகளில் பாடியுள்ளதுடன் 35 வருடங்களுக்கு அதிகமான காலம் இசைத் துறையில் பயணித்துள்ளார்.

1980ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரைத்துறையில் அவர் அறிமுகமானார்.

அத்துடன் பன்னீர் புஷ்பங்கள், கேளடி கண்மணி, ஒரு கைதியின் டயரி, தென்றலே என்னைத் தொடு, புதையல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

இந்த நிலையில் பாடகி உமா ரமணின் இறுதிக் கிரியை இன்று மாலை சென்னை அடையாரில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content