ராஜபக்ஷக்களுக்கு எதிரான மனு ஜுலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது!
முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த மனு இன்று (08) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)