மத்திய கிழக்கு

ரஃபா மீது தாக்குதலுக்கு எதிர்ப்பு; இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தையை நிறுத்த ஹமாஸ் முடிவு

ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் ஏழு மாதங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஃபா நகரைத் தவிர்த்து ஏறக்குறைய முக்கியமான நகரங்களில் இஸ்ரேல் தடைவழி தாக்குதல் நடத்தியுள்ளது.

காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐ.நா. மற்றும் அமெரிக்க இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட வலியுறுத்தி வருகிறது.

இதனால் இரண்டு பக்கத்திலும் இருந்து பேச்சுவார்த்தைக்கு தயாராகி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்போகிறோம். இதனால் ரஃபா நகரில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஃபா மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் எதிர்ப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஃபாவில் வசிக்கும் மக்களை மனிதாபிமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அல் மவாசி, கான் யூனிஸ் பகுதிகளுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒரேயொரு முறை இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது 100 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தினர். ஒரு பிணைக்கைதிக்கு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டள்ள 3 பாலஸ்தீன மக்கள் என்ற வகையில் இஸ்ரேல் விடுதலை செய்தது.

ஏழு நாட்களுக்கு பிறகு ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், மீண்டும் போரை தொடங்கியது. காசாவில் மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்த நிலையில், இந்த சண்டையில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஃபா நகரில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content