Site icon Tamil News

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

நிலவும் காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மற்றும் பரீட்சை ஊழியர்களுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, 0412 234 134 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Exit mobile version