ஆசியா

அமெரிக்காவை அழிக்க சபதம் செய்யும் வடகொரியா!

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை தண்டிக்க வலிமையான, முழுமையான ஆயுதம் வடகொரியாவின் வசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதம் ஏந்திய வடகொரியா, அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட பல்வேறு ஆயுதங்களை சோதனை செய்து, அமெரிக்காவுடன், பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

கொரியப் போர் நடைபெற்று 73 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பியோங்யாங்கில் பேரணி ஒன்று நடைபெற்றது.

இந்த பேரணியில் சுமார் 120,000 உழைக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் அமெரிக்காவை அழிக்க சபதம் செய்யும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

அரச ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், ‘அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் எங்கள் துப்பாக்கிச் சூடு எல்லைக்குள் உள்ளது’ மற்றும் ‘ஏகாதிபத்திய அமெரிக்கா அமைதியை அழிப்பவர்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வடகொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை விரைவில் ஏவும் என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!