ஆசியா

வட கொரியாவுக்கு எந்த நாடும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது- அதிபர் யூன் சுக் இயோல் வலியுறுத்தல்

வட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று தென் கொரியா வலியுறுத்தி உள்ளது.

சர்வதேச அமைதியை கெடுக்கும் வகையில் ராணுவ விவகாரங்களில் வடகொரியாவுடன் ஒத்துழைக்கும் எந்த முயற்சியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசியாவின் ஆசியான் உச்சி மாநாட்டில் தென் கொரிய அதிபர் இந்த கருத்தை தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஆயுதங்கள் சப்ளை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க விரைவில் ரஷ்யாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தென் கொரிய அதிபரின் கருத்து மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது. இதற்கிடையே ஆயுத சப்ளை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்