இலங்கையில் TIN இலக்கம் வழங்குவது தொடர்பான புதிய தீர்மானம்!
இலங்கையில் வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் அல்லது TIN இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை TIN இலக்கமாக பயன்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அத்துடன் ஆறு நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நான்கு நிறுவனங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 31 times, 1 visits today)