உலகம் செய்தி

அமெரிக்காவிற்கு நேட்டோ தேவையில்லை – ட்ரம்ப் ஆவேசம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , நேட்டோ நாடுகளை மீண்டும் கடுமையாக விமர்சித்து, ஈரான் தொடர்பான நிலைமை குறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவில், ஈரானில் நடைபெறும் மோதலில் நேட்டோ நாடுகள் எந்த உதவியும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு நேட்டோவின் ஆதரவு தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தற்போது இராணுவ ரீதியாகச் சிதைக்கப்பட்டுள்ள, ஒரு பைத்தியக்கார தேசமான ஈரானுக்கு உதவுவதற்கு நேட்டோ நாடுகள் முற்றிலும் எதுவும் செய்யவில்லை.

அமெரிக்காவிற்கு நேட்டோவிடமிருந்து எதுவும் தேவையில்லை. ஆனால் இந்த முக்கியமான தருணத்தை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்துகள், அமெரிக்கா மற்றும் NATO இடையிலான உறவுகள் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி