மொரோக்கோ அணியின் தோல்வி : லண்டனில் கலவரம் வெடிப்பு
FIFA கால்பந்தாட்ட போட்டியில் மொரோக்கோ அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் லண்டனில் கலவரம் வெடித்துள்ளது.
மொரோகோ அணி இரசிகர்கள் லண்டனின் எட்ஜ்வேர் சாலையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாருக்கும் இரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் மீது தீபந்தங்கள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கிருந்த பல பொருட்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன.
மேலும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அந்த அதிகாரி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
இதற்குப் பொறுப்பான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய, சமூக ஊடகங்களில் பரவி வரும் சிசிடிவி மற்றும் காணொளிக் காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




