அரசியல் இந்தியா செய்தி

கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் மோடி, நட்டா பங்கேற்பு – கிறிஸ்தவ வாக்காளர்களை கவர பாஜக முயற்சி?

கிறிஸ்துமஸ் தினத்தன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதன் மூலம், கிறிஸ்தவ சமூகத்தை கவர பாஜக முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் கிறிஸ்தவ வாக்காளர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

இதனால், வரவிருக்கும் தேர்தல்களை கருத்திற்கொண்டு, பாஜக கிறிஸ்தவ சமூகத்துடன் நெருக்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், தங்களின் அரசியல் செல்வாக்கு குறைவாக உள்ள இந்த மாநிலங்களில், அதை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவிலும், பிரதமர் மோடி கத்தோலிக்க திருச்சபை தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். கோவிட்-19 பேரிடர் காலத்தில், 2021ஆம் ஆண்டு வத்திகானில் போப் பிரான்சிஸை சந்தித்த அவர், பெருந்தொற்று மற்றும் மனிதநேய பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

இதேவேளை, இஸ்லாமிய சிறுபான்மை நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நேரடியாக அதிகம் கலந்துகொள்ளவில்லையென கூறப்படுகிறது.

அண்மையில், அவரது சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அஜ்மீர் ஷெரீப் தர்காவில் புனிதப் போர்வையை காணிக்கையாகச் செலுத்தினார். இது பிரதமர் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு முஸ்லிம் மத மரபு என குறிப்பிடப்படுகிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை