Site icon Tamil News

பாடசாலையொன்றில் பாரிய பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரடி கள ஆய்வு

வத்தேகம மகளிர் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் பாரிய பக்கச்சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த பக்கச்சுவர் சுவர் இடிந்து விழுந்ததால் பாடசாலை கட்டிட வளாகம் சேதமடைந்துள்ளதா என்றும், எதிர்காலத்தில் என்ன மாதிரியான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பது குறித்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரடி கள ஆய்வில் ஈடுபடவுள்ளது.

வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக பாடசாலையின் பல கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

மாகாண கல்வி திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இன்று (21) மற்றும் நாளை (22) பாடசாலையை மூடுவதற்கு பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 15 திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version